சிறுவர் தினத்தை மதுபானம் அருந்தி கொண்டாடிய மாணவர்கள் : இறுதியில் நடந்தது என்ன?

Published By: Digital Desk 7

03 Oct, 2017 | 12:35 PM
image

களுத்துறை மாவட்டத்தில் கிராமப்புர பாடசாலை ஒன்றில் நேற்று சர்வதேச சிறுவர் தினம் கொண்டாட்டமும், சித்திர கண்காட்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்த வேளையில் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் வைத்து மது அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை அதிபருக்கு குறித்த  பாடசாலை மைதானத்திலிருந்து வெற்று மதுபான போத்தல் ஒன்றும், குளிர்பான போத்தல் ஒன்றும் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு அதிபர் தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் கிடைத்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு அதிகாரிகளுடன் பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மதுபானம் அருந்திய 6 மாணவர்களை கண்டு பிடித்ததோடு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்து மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த 6 மாணவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மது அருந்திய மாணவர்கள் அறுவரையும் பிரதேச வைத்தியசாலைக்கு பெற்றோர்களால் அழைத்து செல்லப்பட்ட  போது வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தாகவும் பின்னர் வைத்தியசாலை பொலிஸாருடன் பெற்றோர்கள் கலந்துரையாடி சமத்துவமான தீர்மானத்திற்கு வந்த பின்னர் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37