நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்: பசன் கஸ்தூரி வலியுறுத்து!

08 Jul, 2026 | 04:25 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பொறுப்பேற்றுள்ளமை ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும், ஜனநாயக ரீதியாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என்றே நாம் நம்புகிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மாபெரும் மக்கள் குரல் அமைப்பின் காரியாலயத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற மோதலானது இரண்டு முக்கிய கட்டங்களைக் கொண்டது. முதலாம் நாள் மோதலானது சிறைச்சாலைக்குள் நிலவும் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களைச் சில கைதிகள் வெளியிட்டதால், கடத்தல்காரர்களுக்கும் தகவல் கொடுத்த கைதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் முதலாம் நாள் நாளிலேயே சில கொலைகள் நடந்துள்ளன. பின்னர் நிலைமை தணிவடைந்ததாகக் கூறப்பட்ட சூழலில், 2 ஆம் நாள் காலை உணவு வரிசையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

2 ஆம் நாள் மோதலின் போது சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சாதாரண உடையில் உள்ளே சென்றபோதே கைதிகளுக்கும் அவர்களுக்குமிடையே கலவரம் தீவிரமடைந்துள்ளது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தச் சம்பவத்தில் 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பெருமளவிலான கைதிகளும் அதிகாரிகளும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் கைதிகளின் கரம் ஓங்கியதால், அதிகாரிகள் சூழப்பட்டு, கற்களாலும் தடிகளாலும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முதல் நாள் மோதல் தணிந்த பின்னர், 2 ஆம் நாள் இவ்வளவு பெரிய விபரீதம் நடப்பதற்கு இடைப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியிருந்தால் இந்த உயிர்ச்சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பேரழிவு நடந்து முடிந்த பின்னரே 700 கைதிகள் பேருந்துகள் மூலம் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட போது, அவர்களை மீட்க இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படையணி அல்லது சிறப்புப் படையணியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற விசேட அதிகாரிகளை அதிபர் அநுர குமார திசாநாயக்கவோ அல்லது பாதுகாப்புத் தரப்போ ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதற்குப் பதிலாக, ஒரு சிறிய துவாரத்தின் ஊடாக அதிகாரி ஒருவர் துப்பாக்கியை உள்ளே நீட்டி, இலக்கின்றி நாலாபுறமும் சுடுவதையே மக்கள் பார்க்க நேரிட்டது. அரசாங்கத்தின் அறியாமையும் அலட்சியமுமே நிலைமை இந்த அளவுக்கு மோசமடையக் காரணமாகும்.

பாராளுமன்றத்திலும் ஊடகங்கள் முன்னிலையிலும் வந்து அமைச்சர் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்றுள்ளார். ஒரு பேரழிவு நடந்த பின்னர் 1971, 1988, 1989 காலப்பகுதிகளில் ஜே.வி.பி  போன்ற புரட்சிகர அமைப்புகள் பொறுப்பேற்பதைப் போலப் பெருமையுடன் பொறுப்பேற்பது நல்லதொரு விடயமல்ல. எனவே, ஜனநாயகக் கட்டமைப்புக்கு மதிப்பளித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நாம் நம்புகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை நீதி...

2026-07-10 14:29:42
news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38