(செ.சுபதர்ஷனி)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள், சிறைகைதிகளை நேற்று (7 ) செவ்வாய்க்கிழமை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் சென்று நலன் விசாரித்திருந்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) மற்றும் திங்கட்கிழமையன்று (6) இடம்பெற்ற கடும் மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளும், சிறைக் கைதிகளும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் 72,79 ஆகிய வார்ட்டுகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் அளவில் அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சிகிச்சைப் பெற்று வருபவர்களின் நலன் மற்றும் சிகிச்சை சேவைகள், அவசரத் தேவைகள் மற்றும் பிற சேவைகள் வழங்குவது தொடர்பிலும் வைத்தியர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் கேட்டரிந்துக் கொண்டார். அதற்கமைய தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 அதிகாரிகள், 14 கைதிகள் உள்ளடங்களாக 29 பேர் சிகிச்சைப்பெற்றுவருவதோடு, அவர்களில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM