மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் கலந்துரையாடல் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் அலுவலகத்தில் இன்று (08) புதன்கிழமை இந்த விசேட சினேகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மலையகப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
மலையகத்தின் நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பிரதி அமைச்சர் அவர்கள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை எனவும், மக்கள் மத்தியில் அதன் சாதகமான தாக்கங்கள் தென்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களின் முன்னேற்றமே தமது முதன்மையான இலக்கு எனவும், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
மலையகத்தின் நிலையான அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய இந்த சந்திப்பு, மலையக அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முக்கியமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM