மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 09ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், அரம்பேபொல ரத்னசார தேரர் ஆகியோரை இன்று தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
கல்கிசையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அத்து மீறல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நண்பகல் சிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM