செல்வி. சஞ்சனா கிருஷானின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஒன்றாரியோவிலுள்ள Richmondhill centre for the performing arts அரங்கத்தில் நடைபெற்றது.
கலைநயமும், ஆன்மீகச் செழுமையும் சங்கமித்த நாட்டியக்கலையின் மரபு மாறாமல் அதேசமயம் சமகால நேர்த்தியுடன் கூடிய கலை விழாவாக நிகழ்வு அமைந்திருந்தது.
நாட்டிய கலாஷேத்திரா நடனக்கல்லூரியின் அதிபரும் சிறந்த நடன ஆசிரியருமான தேனுஜா திருமாறனின் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியிலும், நட்டுவாங்கத்திலும் அரங்கேறிய இந்நிகழ்வில் அரங்கேற்ற நாயகி செல்வி. சஞ்சனா கிருஷான் தமது அற்புதமான அபிநயம், நேர்த்தியான அடவுகள், அங்கசுத்தி, தாளநயம் மற்றும் பாவ வெளிப்பாடுகளால் அரங்கில் கூடியிருந்த அனைவரையும் மெய்மறக்கச் செய்து பெரும் பாராட்டைப் பெற்றார்.
அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு இசையால் உயிரூட்டும் வகையில் பாடல்களை ஸ்ரீமான் அருண்கோபி, வயலின் இசையை ஸ்ரீமா மயூரன் கிரிதரன் , புல்லாங்குழல் இசையினை ஸ்ரீமான் தயாபரன் செல்வநாயகம் ஆகியோர் தங்கள் இசை நுணுக்கங்களால் மெருகூட்ட ,மிருதங்க இசையினை ஸ்ரீமான். ரதிரூபன் பரம்சோதி, அரங்கேற்ற நாயகியின் சகோதரர் ஸ்ரீமான் அஷ்வின் கிருஷான் அவர் தன் குருவுடன் இணைந்து மிகுந்த லயநயத்துடனும், கலைத்திறனுடனும் வழங்கி நிகழ்ச்சிக்குத் தனித்துவமான சிறப்பைச் சேர்த்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு கலைமணிகளின் இந்நிகழ்வு அரங்கில் இருந்த அனைவரையும் பெருமிதத்தில் ஆழ்த்தியது.
செல்வி. சஞ்சனா கிருஷான் சங்கீத வித்வான் ஸ்ரீமதி தனதேவி மித்திரதேவாவிடம் வயலின் மற்றும் வாய்ப்பாட்டு இசையை முறையாகப் பயின்று வருவதால் இசையையும் நடனத்தையும் ஒருங்கிணைத்த அவரது ஆளுமை, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது. இவ் எல்லா சிறப்புகளுக்கும் பெற்றோர்களான கிருஷான், அனந்தி தம்பதியினரின் ஆர்வமும், ஊக்கமும், அரவணைப்புமே இவரது இக்கலைப்பயணத்தின் அடித்தளமாக அமைந்தது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட புகழ்பெற்ற நடன ஆசிரியர் ஸ்ரீமதி சுரேக்கா ராதாகிருஷ்ணன், செல்வி சஞ்சனாவை மனமாரப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். மேலும் சிவாச்சாரியார்கள். மூத்த இசைக்கலைஞர்கள், நடன மற்றும் தமிழ் ஆசிரியர்கள், கலை ஆர்வலர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து விழாவை எழிலுறச்செய்தனர்.
இளமையில் கலைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து, பரதநாட்டியத்தின் பண்பாட்டு மரபை மேன்மேலும் உயர்த்திச் செல்லும் செல்வி. சஞ்சனா, செல்வன். அஷ்வின் இருவரும் கலை உலகில் மேலும் பல உயரிய சிகரங்களை எட்ட வேண்டும் என அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM