தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 'சரவணபவன்' சைவ உணவகத்தின் நூற்றுக்கணக்கான கிளைகள் உலகெங்கும் இயங்கிவருகின்றன.
அவற்றுள் நான்கு 'சரவணபவன்' கிளைகளை கனடாவில் நிர்வகித்து வருபவரும் வர்த்தகத்துறை முன்னோடியுமான கணேசன் சுகுமார் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் பொது வைத்தியசாலைகள் மற்றும் ஆலயங்கள், -பொது அமைப்புக்கள் ஆகியவற்றுக்கு தாரளமாக நிதி அன்பளிப்புக்களை வழங்கி வருகிறார்.
அந்த வரிசையில் கடந்த முதலாம் திகதி கனடா தினத்தன்று சரவணபவன் ஸ்காபுறோ கிளையில் ஆயிரக்கணக்கான முதியவர்களான பெரியோர்களுக்கு இலவசமாக மசாலா தோசையும் தேநீர் மற்றும் குளிர்பானங்களையும் வழங்கினார்.
இதற்காக மேற்படி கிளையின் வாகனத் தரிப்பிடத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்கள் வசதியாக இருந்து உணவருந்திச் செல்ல வாய்ப்புக்களை வழங்கினார்.
அத்துடன் அன்றைய தினம் கனடாவின் மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நகரசபைகளின் கவுன்சிலர்கள் என பலரும் சங்கமித்த நிகழ்வில் ஸ்காபுறோ பொது வைத்தியசாலை நிதிக்காக 5 இலட்சம் கனேடிய டொலர்களை அன்பளிப்புச் செய்தார்.
வைத்தியசாலையின் சார்பில் அதன் பிரதி நிதி ஒருவரிடம் கணேசன் சுகுமார் மற்றும் பிரமுகர்கள் ஒன்றிணைந்து அந்த 'மாதிரிக் காசோலை'யை வழங்கினார்கள்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM