அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு தேவை

05 Jul, 2026 | 10:20 AM
image

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் என்­பது தேசிய மக்கள் சக்தி அர­சாங்க காலத்­திலும் கானல்­நீ­ராக மாறி விடுமோ என்ற சந்­தேகம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வது குறித்தோ அல்­லது அது குறித்து தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வது தொடர்­பிலோ எத்­த­கைய எண்­ணப்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது தற்­போது புல­னா­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் அர­சியல் தீர்வு காணப்­படும் என்று தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் இதற்­கான உறுதி மொழிகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

ஜனா­தி­பதித் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று உறுதி வழங்­கப்­பட்­டது. நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­றிட்­டங்­களை விட்ட இடத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­பதன் மூலம் துரி­த­க­தியில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் வரையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள மாகாண சபை முறைமை அமுலில் இருக்கும் எனவும் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் பத­வி­யேற்று தற்­போது இரண்டு வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­றிட்டம் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்குக் கூட தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தயா­ராக இல்­லாத நிலைமை நீடித்து வரு­கின்­றது.

நாட்டில் சகல இன மக்­களும் சமத்­து­வத்­துடன் வாழ்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ள­துடன் அதற்­கான செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

நாட்டில் சகல இன மக்­களும் சமத்­து­வத்­துடன் வாழ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­காக அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கைகள் உண்­மை­யி­லேயே பாராட்­டத்­தக்­கது. அதில் எந்­த­வித மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. ஆனால், சிறு­பான்­மை­யி­ன­மான தமிழ், முஸ்லிம் மக்­களின் தனித்­துவம் பேணிப் பாது­காக்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது கலா­சார விழு­மி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­யது அவ­சிய­மாகும். அதற்­கேற்ற வகையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு என்­பது அவ­சியம் என்­பதை அர­சாங்கம் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

தற்­போ­தைய நிலையில் சகல இன மக்­க­ளையும் சமத்­து­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய சூழ்­நி­லையை உரு­வாக்­கு­வ­தாகக் கூறும் அர­சாங்கம் சிறு­பான்­மை­யின மக்­களின் தனித்­து­வத்­தினை பேணிப் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இல்லை.

அதி­காரப் பர­வ­லாக்­கலில் ஆரம்­பக்­கட்­ட­மாக அமைந்த மாகாண சபை முறை­மையைக் கூட அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் பின்­ன­டிப்­ப­தா­கவே தெரி­கின்­றது. மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களை நடத்தும் விட­யத்தில் அர­சாங்கம் இழுத்­த­டிப்பு போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. கடந்த 8 வருட காலத்­துக்கு மேலாக மாகாண சபைகள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளின்றி ஜனா­தி­பதி நேரடி பிர­தி­நி­தி­க­ளான ஆளு­நர்­களின் நிர்­வா­கத்தின் கீழேயே செயற்­பட்டு வரு­கின்­றன.

உண்­மை­யி­லேயே மாகாண சபை­களின் அதி­கா­ரங்கள் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மானால் அதற்­கான தேர்­தல்கள் நடத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால், முன்­னைய அர­சாங்­கங்­களைப் போன்றே சாக்­கு­போக்­கு­களைக் கூறி தேர்­தலை நடத்­தாது பிற்­போடும் செயற்­பாட்­டி­லேயே தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் ஈடு­பட்டு வரு­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் கடந்த கால அர­சாங்­கங்­களும் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யி­ருக்­க­வில்லை. 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­ன­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றி­ருந்­தது. இதன்­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் பதவி வகித்­தி­ருந்தார். அன்று தெற்கின் எதிர் எதிர் சக்­தி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.

இரு துரு­வங்­க­ளான பிர­தான கட்­சிகள் இரண்டும் ஒன்­றி­ணைந்து ஆட்சி அமைத்­தி­ருந்த நிலை­மை­யா­னது அர­சியல் தீர்­வுக்கு நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாக அமையும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் பதவி வகித்­தமை அர­சியல் தீர்­வுக்கு மேலும் உந்­து­ சக்­தி­யாக அமையும் என்றும் கரு­தப்­பட்­டது.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் தான் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அன்­றைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் வழி­ ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இதன்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்டு, மாகா­ணங்­க­ளுக்கு மீளவும் பெற முடி­யாத அதி­கா­ரங்­களை வழங்­கு­வது தொடர்­பிலும் ஒரு­மித்த நாட்­டுக்குள் இத்­த­கைய தீர்வை முன்­னெ­டுப்­பது குறித்தும் ஆரா­யப்­பட்­டது.

அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டது. இந்தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் கண்­டு­விட முடியும் என்று அன்­றைய எதிர்க்­கட்சித் தலை­வ­ரான இரா. சம்­பந்தன் நம்­பிக்கைக் கொண்­டி­ருந்தார். இதன் கார­ண­மாக விட்டுக் கொடுப்­பு­க­ளுடன் அவர் செயற்­பட்­டி­ருந்தார். இந்த வழி­ந­டத்தல் குழுவில் அன்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சார்பில் அதன் தலை­வ­ராக இருந்த அநு­ர­கு­மார திசா­நா­யக்க அங்கம் வகித்தார். அர­சியல் தீர்வு தொடர்­பிலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்தும் அவ­ரது கருத்­து­களும் பெறப்­பட்­டி­ருந்­தன. இவ்­வாறு அன்று வழி­ந­டத்தல் குழுவில் அங்கம் வகித்து அர­சியல் தீர்வு குறித்த கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்று ஒத்­து­ழைப்பு வழங்­கிய ஜே.வி.பி.யின் அன்­றைய தலை­வர்தான் இன்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யி­லி­ருக்­கின்றார்.

அவர் போட்­டி­யிட்ட ஜனா­தி­பதித் தேர்­தலின் போதுதான் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற உறுதி மொழி தேசிய மக்கள் சக்­தியால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இன்று அவர் பத­வி­யேற்று இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாகி விட்ட நிலை­யிலும் அர­சியல் தீர்வு என்­பது வெறும் கானல்­நீ­ரா­கவே மாறி­யி­ருக்­கின்­றது.

அர­சியல் தீர்வு விட­யத்தில் அர­சாங்கம் அக்­க­றை­கொள்­ளாத நிலையில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் சார்­பி­லா­வது அர­சியல் தீர்வு குறித்த திட்­ட­வ­ரைபு தயா­ரிக்­கப்­பட்ட வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

தமிழ் மக்­களின் சார்பில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து அர­சியல் தீர்வு குறித்து கலந்­து­ரை­யாடி திட்­ட­வ­ரை­பொன்றை தயா­ரித்து அதனை அர­சாங்­கத்­துக்கு முன் வைக்க வேண்­டி­யதன் அவ­சியம் தற்­போது உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால், இந்த அர­சியல் தீர்வு தொடர்­பான திட்ட வரைபை ஒன்­றி­ணைந்து தயா­ரிக்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளி­டையே முரண்­பா­டான நிலைமை நீடித்து வரு­கின்­றது. இந்த விட­யத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­மை­களை ஒன்­றி­ணைக்கும் முயற்­சியில் தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேரவை நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வை­யா­னது மூன்று தட­வைகள் இதற்­கான கூட்­டங்­களை ஏற்­பாடு செய்­தி­ருந்த போதிலும் தமிழ் தேசியக் கட்­சி­களின் சகல தலை­மை­க­ளையும் ஒன்­று­ப­டுத்த முடிந்­தி­ருக்­க­வில்லை. இதற்கு முன்னர் சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளை ஒன்றிணைத்து அரசியல் தீர்வு திட்டவரைபை தயாரிப்பதற்கு முனைந்திருந்தது. அந்த முயற்சியும் கைகூடியிருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசிய பேரவை, சிவில் சமூக அமைப்பினருடன் இணைந்து புதிய அரசியல் தீர்வு வரைபினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு அண்மையில் மூன்று குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு தமிழ் தேசியப் பேரவை சார்பில் ஒரு குழுவும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் மற்றொரு குழுவும் ஏனைய அமைப்புகளின் சார்பில் வேறொரு குழுவும் என பல்வேறு குழுக்கள் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் ஆராய்வது எந்த வகையிலும் நன்மையளிக்கக் கூடிய விடயமல்ல. எனவே, சகல தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து திட்டவரைபொன்றை தயாரித்து அதனை அரசாங்கத்திடம் முன்வைத்து அழுத்தம் கொடுப்பதே இன்றைய நிலையில் சிறந்ததென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41