பிறந்த பிள்ளைகளில் சிலருக்கு மிக அரிதாக ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தற்போது இன்ட்ரா- ஒர்ட்ரியல் கீமோதெரபி எனும் நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டு பார்வை திறன் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மருத்துவ மொழியில் ரெட்டினோபிளாஸ்டோமா என குறிப்பிடப்படும் கண் புற்றுநோய் பாதிப்பு - எம்முடைய விழி திரையில் உள்ள செல்கள் இயல்பை விட கூடுதலாக வளர்ச்சி அடைவதால் ஏற்பட தொடங்கும் புற்றுநோய் பாதிப்பாகும். விழி திரை என்பது கண்ணின் உட்புறத்தில் உள்ள ஒளியை உணரும் படலமாகும்.
ரெட்டினோபிளாஸ்டோமா எனும் பாதிப்பு பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பொதுவாக இரண்டு வயதிற்குள் இத்தகைய பாதிப்பு கண்டறியப்படுகிறது. இவை பெரும்பாலும் ஒரு கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெகு அரிதாகவே இரண்டு கண்களிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஒளியை பார்த்தால் கண் கூச்சம், கண் சிவத்தல், வீக்கம், பார்வை திறன் குறைபாடு... ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். கண்களில் உள்ள செல்களின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படும் போது இத்தகைய பாதிப்பு உண்டாகக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய அரிய வகை கண் புற்றுநோய் பாதிப்பு பொதுவாக உடலின் வேறு பகுதிகளுக்கு பரவுவதில்லை. இருப்பினும் இதற்கு உரிய வகையில் சிகிச்சை பெற்றால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். சில தருணங்களில் ஒரு கண்ணில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய ரெட்டினோபிளாஸ்டோமா மற்றொரு கண்ணுக்கும் பரவக் கூடும். இதனால் இதற்கான சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
இத்தகைய தருணங்களில் கீமோதெரபி சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும், தற்போது அறிமுகமாகி இருக்கும் இன்ட்ரா- ஒர்ட்ரியல் கீமோதெரபி எனும் நவீன சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்திருக்கும் செல்கள் மீது துல்லியமாக பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை செலுத்தி முழுமையான நிவாரணத்தை வழங்கி, பார்வையை பாதுகாக்கவும் ... மீண்டும் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வைத்தியர் வித்யா தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM