ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை  எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும்  : விமல்

Published By: Priyatharshan

28 Jan, 2016 | 03:41 PM
image

(பா.ருத்ரகுமார்)

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு  விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விஜடுத்துள்ளார்.  

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதினைந்தாம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செய்ட் அல் ஹுசேன் யுத்த குற்றங்களை விசாரணை செய்யவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். 

தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து இரானுவத்தினரை காட்டிக்கெடுக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.   

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவராவார்.  உலகளவில் மனித உரிமைகள் மீறப்படுவதும் கொடூர சமய சட்டதிட்டங்களை செயற்படுத்தும் நாட்டில் வாழ்ந்தவர் . எமது  நாட்டில் மனித உரிமை தொடர்பில் ஆராய முடியும் என்பது வேடிக்கையான விடயமாகும். 

மேலும் மக்களை ஏமாற்றி, நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது. 

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின்  இலங்கை  விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08