(பா.ருத்ரகுமார்)
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விஜடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதினைந்தாம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செய்ட் அல் ஹுசேன் யுத்த குற்றங்களை விசாரணை செய்யவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து இரானுவத்தினரை காட்டிக்கெடுக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவராவார். உலகளவில் மனித உரிமைகள் மீறப்படுவதும் கொடூர சமய சட்டதிட்டங்களை செயற்படுத்தும் நாட்டில் வாழ்ந்தவர் . எமது நாட்டில் மனித உரிமை தொடர்பில் ஆராய முடியும் என்பது வேடிக்கையான விடயமாகும்.
மேலும் மக்களை ஏமாற்றி, நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது.
எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM