தலைநகரில் தனித்துவத்தோடு இயங்கும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியாகதிருமதி சிவகௌரி.(சுடரி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியல்மாணி சிறப்புக் கற்கை மற்றும் உளவியல் சான்றிதழ் கற்கை நிறைவு செய்துடன் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத் தில் ஆங்கில டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர் ஆவார்.
தொழில் ரீதியாக 2008 இல் பதிவாளர் நாயக திணைக் களத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக முதல் நியமனம் பெற்றவர்தற்போது வவுனியா மாவட்ட பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளராக கடமை புரிகிறார்
அத்தோடு பதிவாளர் நாயக திணைக்களத் தின் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப் பாளராகவும்நீதியமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
கலை,இலக்கிய துறையில் இதுவரை சஞ்சிகைகள், ஆண்டு மலர்கள் போன்றவற்றிற்கு கவிதை,கட்டுரை சிறுகதை என ஆக்கங்கள் எழுதி வருகிறார்.
2025 ஆம் ஆண்டு முதல் பல நூல்களை வெளியிட்டுவருகிறார். இவரது முதலாவது கவிதை தொகுப்பு "பிரபஞ்ச பேரொளியே..." அடுத்தது சிறுகதை தொகுப்பான "அவளுக்கென்று ஓர் உலகம்" மற்றையது"காதலாகி...." எனும் கவிதை தொகுப்பு "உனக்குள் உன்னைத்தேடு" என்னும் கட்டுரை தொகுப்பு. முத்துப்பரல்கள் ஹைக்கூ தொகுப்பு என்பன அடங்கும் இன்னும் பல படைப்புகளும் வெளிவர உள்ளன.
சமூகத்திற்கு வழிகாட்டியாகவும் பொதுப் பணிகளில் ஈடுபடுபவராகவும் விளங்கும் இவர் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் தலைவியாக தெரிவாகி இருப்பது வாழ்த்துக்கும் பாராட்டுக்குமுரியது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM