பங்களாதேஷில் 8 இலட்சம் போதை மாத்திரைகளை கடத்திய 3 ரோஹிங்யா வாலிபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மியான்மாரின் ரக்கினேவில் இராணுவ நடவடிக்கை மற்றும் கலவரத்தால் ரோஹிங்யா இன மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அங்கிருந்து உயிர் தப்பிக்க சுமார் 5 இலட்சம் ரோஹிங்யா மக்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். ரோஹிங்யா அகதிகளுடன் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் பங்களாதேஷிற்கு யாபா என்ற போதை மாத்திரைகளை கடத்தி வந்த ரோஹிங்யாக்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 3 ரோஹிங்யாக்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் மற்றும் மியான்மார் நாட்டை பிரிக்கும் நாப் ஆற்றில் படகில் சென்றவர்களை பங்களாதேஷ் சிறப்பு படை பொலிஸ் இடைமறித்து விசாரித்த போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படகில் இருந்து 8 இலட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரமும் 430,000 போதை மாத்திரைகளை கடத்தியதாக இரு ரோஹிங்யா வாலிபர்களை பொலிஸார் கைது செய்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM