ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் தோல்வியடைவோம் என மஹிந்த ராஜபக் ஷ வுக்கு இரண்டு மணிநேரம் விளக்கிக்கூறினேன். பின்னர் தனது தவறை என்னி டம் ஒப்புக்கொண்டார் என இலங்கை கம்யூனி ஸ்ட் கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியு குணசேகர தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பம் முதல் போராடியது இலங்கை கம் யூனிஸ்ட் கட்சியாகும் என்றும் தெரிவித் தார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 ஆவது தேசிய சம்மேளனம் நேற்று நாரஹேன்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதான உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் தேசியப்பிரச்சினை இருப்பதாக 1944ஆம் ஆண்டு எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் வருடத்திலேயே நாங்கள் தெரிவித்தோம். அதற்கு தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தையும் முன்வைத்தோம். அத்து டன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணாவிட் டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தோம். அதன் பிரகாரம் 1956ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினை ஏற்பட்டது.
மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாங்கள் போராடினோம். அதனால் எமது கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்ட னர். அதனால் பலர் உயிரிழந்தனர். தேர்தல்களில் தோல்வியடைந்தோம். என்றாலும் நாங்கள் எமது நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. அதன் காரணமாக தற்போது அனைத்து கட்சிகளும் சிங்களம் மற்றும் தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளன . அன்று நாங்கள் தமிழ் மக்களுக்காகவே தாக்கப்பட்டோம்.
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின்போது எமது கட்சி முன்னின்று தமிழ் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. அதனால் எமது கட்சி தடைசெய்யப்பட்டது. எமது ஆதரவாளர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அத்துடன் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் வருடத்தில் இந்தியாவில் இருந்துவந்த மலையக மக்களின் வாக்குரிமையை இரத்துச்செய்வதற்காக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு முன்னின்று செயற்பட்டது.
மேலும் எமது கட்சியின் 20ஆவது சம்மேளனம் 2014ஆம் ஆண்டு இடம்பெற்றபோது, நாட்டில் அரசியலில் 2015ஆம் ஆண்டு பாரிய மாற்றம் இடம்பெறலாம் என்று தெரிவித்தேன். அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டாம் என மஹிந்த ராஜபக் ஷவுக்கு 2 மணிநேரம் நான் தெளிவுபடுத்தினேன். அவ்வாறு தேர்தலு க்கு சென்றால் நிச்சயமாக தோல்வியடை வோம் என்று அரசியல் எதிர்வுகூறலாக தெரிவித்தேன். பின்னர் மஹிந்த ராஜபக் ஷ என்னிடம் வந்து, உங்கள் பேச்சை கேட்கா மல் இருந்தது நான் செய்த தவறாகும் என்று தெரிவித்தார். இன்று அரசியல் எதி ர்வு கூரல்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை தலைவர்களிடமும் இல்லை. அரசியல் வாதிகளிடமும் இல்லை. எதிர்கால அரசி யல் நிலைமைகளை அறிந்துகொள்ள சாஸ்திரக்காரர்களிடம் செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளது.
மேலும் உலகம் பொருளாதார மற்றும் பயங்கரவாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றது. பயங்கரவாதம் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. எமது நாடும் 30 வருடங்கள் இந்த பயங்கரவாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து வந்தது. பயங்கரவாதத்துக்கு அடிப்படைக்காரணமாக இருப்பது பொருளாதார பிரச்சினையாகும். அதனால் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். இது தொடர்பாக அரசியல்வாதிகள் சிந்திப்பதில்லை.
எனவே விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் தீர்வுகள் இல்லாத பிரச்சினை இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண் டும். அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஊழல் மோசடியா கும். இன்று அது சர்வதேச மட்டத்தில் வியாபித்து சென்றுள்ளது. இதனை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM