சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
இதன்போது, இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனப் போட்டியில் (1st World Yogasana Championship – 2026) இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் ஊவா மாகாண கூட்டமைப்பின் ஊடாக பங்கேற்று வெற்றியீட்டிய R. முகேஷ்கர், K. லதுர்சன், S. பிரதீஷ், G. வகீஷன், T. தயதீக்சன், R. ரித்திகா ஆகிய மாணவ, மாணவிகள் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினரால் பாராட்டப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திய கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான A. ராஜ்குமார், இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் ஊவா மாகாண கூட்டமைப்பின் தலைவரான V. யோகச்சந்திரன் மற்றும் செயலாளரான P. யசோபிரசாத் ஆகியோர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM