இலங்கை பெனெலக்ஸ் வணிக கவுன்சில் (Sri Lanka Benelux Business Council) மற்றும் இலங்கை வர்த்தக சபையுடன் இணைந்து, ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ரெசிடென்ஸில் வணிக மன்றம் மற்றும் B2B வணிக வலையமைப்பு அமர்வை நடத்தியது.
இந்த நிகழ்வில் பெல்ஜியம் மற்றும் லக்ஸ்சம் பேர்க் நாடுகளைச் சேர்ந்த 19 வணிக பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன் மூலம் இலங்கை மற்றும் பெனெலக்ஸ் பிராந்தியத்திற்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பெல்ஜிய தூதுவர் டிடியர் வாண்டர்ஹசெல்ட் (Didier Vanderhasselt) மற்றும் பெல்ஜியம், லக்ஸ்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவர் சந்தன வீரசேன ஆகியோர் தமது உரைகளில் இலங்கை மற்றும் பெல்ஜியத்திற்கிடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்து, பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த மன்றத்தில் தொழில்நுட்பம், புத்தாக்க படைப்புக்கள், நிலையான அபிவிருத்தி, உற்பத்தி, தொழில்துறை மேம்பாடு, விவசாய உணவு பதப்படுத்துதல், வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் தீர்வுகள், நிதி மற்றும் தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, இலங்கை வர்த்தக சபை மற்றும் பெனெலக்ஸ் இலங்கை வணிகக் கவுன்சில் ஆகியவற்றுக்கிடையில் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக ஒத்துழைப்பு மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை வர்த்தக சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிரான் பெர்னாண்டோ, இலங்கை பெனெலக்ஸ் வணிகக் கவுன்சிலின் தலைவர் பர்ஹாத் அமித், பெனெலக்ஸ் இலங்கை வணிகக் கவுன்சிலின் தலைவர் தோமஸ் டி பியூல் மற்றும் அதன் பொதுச் செயலாளர் சம்பத் தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, இலங்கை பெனெலக்ஸ் வணிகக் கவுன்சிலின் தலைவர் பர்ஹாத் அமித் மற்றும் துணைத் தலைவர் ஷமீல் மொஹிதீன் ஆகியோர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, இருநாடுகளின் தூதுவர்களும் ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM