இங்கிலாந்துக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எவின் லீவிஸ்-க்கு காயம் ஏற்பட்டதால் அவர் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
லண்டன் ஓவலில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களைக் குவித்தது.
அதிரடி ஜாலம் காட்டிய எவின் 176 ஓட்டங்களை (130 பந்து, 17 பவுண்டரி, 7 சிக்ஸர்) விளாசிய நிலையில், காயமடைந்தார்.
இங்கிலாந்தின் ஜாக் போல் வீசிய பந்து அவ ரது வலது கணுக்காலை பதம் பார்த்து விட்டது. வலியால் துடித்த அவரால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. இதையடுத்து மிகுந்த ஏமாற்றத்துடன் ஸ்டிரச்சர் உதவியுடன் வெளியேறினார்.
மேலும் 22 பந்துகள் எஞ்சி இருந்ததால் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் இரட்டைச் சதம் அடித்த 6-ஆவது வீரர் என்ற சாதனை பட்டியலில் இணைந்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக காயத்தில் சிக்கிவிட்டார்.
இறுதியில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 6 ஓட்டங்க ளால் வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM