தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.!

Published By: Robert

29 Sep, 2017 | 11:25 AM
image

தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் குறித்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக 214 பேர் தக­வல்கள் கோரி­யுள்­ளனர். இதன் மூல­மாக 176 பேருக்கு தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி இவர்­க­ளிடம் இருந்து தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு மொத்­த­மாக 933 ரூபா அற­வி­டப்­பட்­டுள்­ள­தாக தகவல் வழங்கல் அதி­கா­ரியும் பொது நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சின் மேல­திக செய­லா­ள­ரு­மான பி.எம்எம்.எம் பஸ்­நா­யக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சர்­வ­தேச தகவல் அறியும் தினத்தை முன்­னிட்டு நிதி மற்றும் ஊடக துறை அமைச்சு நேற்று வெள்­ள­வத்தை கோல்ட் டவர் ஹோட்­டலில்  நடத்­திய மாநாட்டின் போது­வெ­ளி­யி­டப்­பட்ட  உத்­தி­யோ­க­பூர்வ வெளி­யீட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் குறித்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக 214 பேர் தக­வல்கள் கோரி­யுள்­ளனர். இதன் மூல­மாக 176 பேருக்கு தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி இவர்­க­ளிடம் இருந்து தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு மொத்­த­மாக 933 ரூபா அற­வி­டப்­பட்­டுள்­ளது.

மக்­க­ளினால் கோரப்­பட்ட தக­வல்­களின் பிர­காரம் அரச ஊழி­யர்­க­ளினால் எடுக்­கப்­படும் தீர்­மா­னத்தின் மீது மக்கள் அவ நம்­பிக்கை கொண்­டுள்­ளமை கோரப்­பட்ட தக­வல்­களின் ஊடாக எமக்கு கண்­கா­ணிக்க முடிந்­தது. எனவே மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டுத்தும் வகையில் அரச ஊழி­யர்கள் செயற்­பட வேண்டும்.

அத்­துடன் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை பயன்­ப­டுத்தி அரச ஊழி­யர்­களை சிக்­க­லுக்கு தள்ளும் வகை­யி­லான தக­வல்­களை கோரு­வ­தற்கு ஒரு சில குழு­வினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்த குழு­வி­னர்­களின் தகவல் கோரிக்­கைகள் சட்­ட­மூ­லத்தின் விதி­மு­றை­களின் பிர­காரம் வழங்க முடி­யா­த­வை­க­ளாகும். ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் இனங்­கா­ணப்­பட்ட பிர­தான பிரச்­சி­னை­யாக மேற்­கூ­றப்­பட்ட விட­யங்­களை கருத முடியும்.

மேலும் பல வரு­டங்­க­ளுக்கு முன்­புள்ள தக­வல்­களை சிலர் கோரு­கின்­றனர். உண்­மையில் இவ்­வா­றான தக­வல்­களை பெறுவதில் பெரும் சிக்கல் உள்ளன. தற்போதைக்கு அவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்வது கடினமாகும். எனவே தகவல் வழங்கும் சட்டமூலத்தின் ஊடாக இவ்வாறான சவால்களுக்கு அதிகாரிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59