501 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று (16) செவ்வாய்க்கிழமை சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.
கொரிய சர்வதேச சுகாதார சேவை மன்றம் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவித் திட்டத்தின்கீழ், இலங்கையிலுள்ள கொரியக் குடியரசுத் தூதுவர் மியோன் லீ மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, மத்திய, வடமத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாண உயிர்மருத்துவ பொறியியல் சேவை அலகுகளின் பாவனைக்காக 228 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன மருத்துவப் பரிசோதனை மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கான உபகரணங்களும் அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் மருத்துவத்துறையில் எம்.ஆர்.ஐ, சி.ரி ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்களின் தொடர்ச்சியான நோயாளர் பராமறிப்புக்கும் தடையற்ற சேவைக்கும் இந்த மத்திய நிலையம் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டங்களுக்கு கொரிய அரசாங்கம் வழங்கிவரும் பல தசாப்தகால நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM