ராகம பகுதியில் உள்ள தொலைபேசி கோபுர கேபிள்களை வெட்டி திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்ப்பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய அதிகாரிகள் குழுவினால் சனிக்கிழமை (13) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின் குறித்த நபர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர்கள் சுமார் 922,750 ரூபா பெறுமதியான தொலைபேசி கோபுர கேபிள்களை வெட்டி திருடியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், திருடப்பட்ட பெருமளவிலான கேபிள் துண்டுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மொரட்டுவை பகுதியில் தொலைபேசி கம்பிகளை வெட்டி திருடியமை மற்றும் பல்வேறு வீடடைப்பு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை (13) பிற்பகல் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மொரட்டுவை பகுதியில் சுமார் 180,000 ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை வெட்டி திருடியுள்ளமை மற்றும் பல வீடுகளினுள் புகுந்து பெறுமதியான சொத்துக்களையும் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பெருமளவிலான செப்பு கம்பிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான நபர் ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM