நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

13 Jun, 2026 | 01:58 PM
image

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’  எச்சரிக்கை  விடுத்துள்ளது. 

இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இப்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரித்து பலத்த வீசக்கூடும். 

மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினரும், மீனவ சமூகத்தினரும் இந்த கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரை (முல்லைத்தீவு ஊடாக) மற்றும் கல்பட்டி முதல் பொத்துவில் வரை (கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக) ஆகிய கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இப்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரித்து வீசக்கூடும்.

எனவே, இந்த கடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் (விழிப்புடன்) செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மன்னார் முதல் பொத்துவில் வரையான (கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக) கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08