இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தல் பொருட்கள் கடத்த இருப்பதாக இராமநாதபுரம் க்யூ பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (12) இந்த வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அப்போது அரியமான் கடற்கரை அருகே இருந்த தோப்பு ஒன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை பொலிஸார் சோதனையிட்டனர்.
அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 பெட்டிகளில் சுமார் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் மதிப்பிலான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் கைப்பற்றிய இந்திய கியூ பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இந்திய க்யூ பிரிவு பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM