(செ.கவிஷனா)
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (12) அதிகாலை 1 மணியளவில் 217 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்களுடன் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு எல் – 606 என்ற ஏர்பஸ் எ330 ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு அருகில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விமானத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அதிகாலை 1.40 மணியளவில் விமானத்தை மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பின்னர் மற்றொரு மாற்று விமானம் மூலம் வெள்ளிக்கிழமை (12) காலை 6.06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்ரேலியா சிட்னி நகருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த எதிர்பாராத சம்பவத்தின் காரணமாக விமானப் பயணம் சுமார் 5 மணித்தியாலங்களும் மேலாக தாமதமடைந்துள்ளது.
மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம் மேலதிக பரிசோதனைகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொறியியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM