இலங்கையிலுள்ள மக்கள் சீனக் குடியரசின் புதிய பாதுகாப்பு இணைப்புச் செயலர் சீனியர் கேர்ணல் ஃபூ சியாவோ மற்றும் இலங்கை சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் நாயகம் துஷார ரோட்ரிகோ ஆகியோருக்கு இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் நாயகம் என்ற தனது உத்தியோகபூர்வ தகைமையின் அடிப்படையில் இந்த சந்திப்பை நடத்திய துஷார ரோட்ரிகோ, இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் குறித்து இரு அதிகாரிகளும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாகத் தெரிகிறது.
இலங்கையின் பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவின் பங்களிப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM