பிரபல பொலிவூட் நட்சத்திரங்களான ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இன்று (12) வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்த முக்கிய பொலிவூட் பிரபலங்களுக்கு, சொகுசு மற்றும் பிரத்தியேக வசதிகள் கொண்ட அதிவேக 'சில்க் ரூட்' விசேட சேவை முனையத்தின் ஊடாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு வரும் விசேட அதிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சௌகரியம், தனியுரிமை மற்றும் வசதிக்காக இந்த 'சில்க் ரூட்' சேவை முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரத்தியேக சேவையின் மூலம், நட்சத்திரங்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை எவ்வித தாமதமுமின்றி, முன்னுரிமை அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணப் பரிசீலனைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உதவிகள் தடையின்றி வழங்கப்பட்டன.
சர்வதேச அளவில் இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்டப் பயணிகள் மற்றும் உலகளாவிய பிரபலங்களுக்கு அதிவேக, நேர்த்தியான மற்றும் பிரத்தியேகமான சேவையை வழங்குவதில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 'சில்க் ரூட்' சேவை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM