அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன. எனினும், இரு தரப்பினரின் தாக்குதல்கள் காரணமாக நிலைமை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிக்கொப்டர் ஒன்று ஈரான் ஆதரவு தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அமெரிக்கா ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக ஈரானும் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், “ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு திறன்களின் பெரும்பகுதி ஏற்கனவே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்புகளை எதிர்காலத்தில் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் பெரும்பாலான மசகு எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவு வழியாக நடைபெறுவதால், இந்த அறிவிப்பு உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்து சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM