ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

11 Jun, 2026 | 11:56 PM
image

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன. எனினும், இரு தரப்பினரின் தாக்குதல்கள் காரணமாக நிலைமை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிக்கொப்டர் ஒன்று ஈரான் ஆதரவு தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அமெரிக்கா ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு பதிலடியாக ஈரானும் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில், தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், “ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு திறன்களின் பெரும்பகுதி ஏற்கனவே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்புகளை எதிர்காலத்தில் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் பெரும்பாலான மசகு எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவு வழியாக நடைபெறுவதால், இந்த அறிவிப்பு உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்து சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07