கதிரேசன் மத்திய கல்லூரி, கதிரேசன் மாதிரி பாடசாலை, மற்றும் கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி அதிபர்களுடனான விசேட சந்திப்பும், கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் பாடசாலை ஆசிரியர்களுடன் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், தாய் சங்க உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு கிளைச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து விரிவாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், மூன்று கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த கல்விச் சாதனைகளை நோக்கிச் செல்லும் வழிமுறைகள் தொடர்பாக பயனுள்ள ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
கதிரேசன் கல்விக் குடும்பத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அனைவரும் இணைந்து செயற்பட உறுதியளித்த இக்கலந்துரையாடல் சிறப்பாக நிறைவுபெற்றது.
“கல்வியே சிறந்த செல்வம்” என்ற உயரிய நோக்குடன் கதிரேசன் கல்விக் குடும்பத்தின் முன்னேற்றப் பயணம் தொடரட்டும்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM