பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

Published By: Vishnu

08 Jun, 2026 | 09:53 PM
image

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இன்று திங்கட்கிழமை காலை (08) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளை விடுத்தது, பின்னர் அவை விலக்கிக்கொள்ளப்பட்டன.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள சரங்கானியில் 17 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளால் ஏற்பட்டவை.

புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மானி பாக்கியோவின் சொந்த ஊரான 'ஜெனரல் சாண்டோஸ்' நகரில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07