கடந்த காலத்தில், ஹெக்கர்கள் திறைசேரியிலிருந்து 2.2 மில்லியன் டொலரைத் திருடிவிட்டதாகக் கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால். சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, அதைவிட மிகப் பெரியதாக உள்ளது என முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார்.
கண்டி, டெவோன் ஹோட்டலில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேற்கண்ட தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
2025-ல் அரசாங்கத்திடம் இருந்த பணத்தில் 808 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான சரியான விபரங்கள் இல்லை என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அந்த அறிக்கையில் மேற்படி 808 மில்லியன் டொலர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் நிதி அமைச்சர் இந்தப் பணம் பற்றித் தௌிவுபடுத்தவேண்டும். இந்த மாபெரும் தொகைக்கு என்ன ஆனது? அது எங்கு இருக்கிறது? இது பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.
கடந்த காலத்தில், ஹெக்கர்கள் திறைசேரியிலிருந்து 2.2 மில்லியன் டாலரைத் திருடிவிட்டதாகக் கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால். சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, அதைவிட மிகப் பெரியதாக உள்ளது. பில்லியன் கணக்கான டாலர்கள் வெளியேறுகின்றன. அரசாங்கத்தைச் சுற்றியுள்ள சில திருடர்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தவறாகப் பயன்படுத்தப்படுகிது, சட்டம் இரண்டு விதமாக செயல்படுவாதாகக் கூறப்படுகிறது. ஆதரவாளர்களுக்கு ஒரு விதமாகவும் எதிர்ப்பவர்களுக்கு மற்றொரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்களைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை, உலகிலேயே அதிக எரிபொருள் விலையை இலங்கைதான் செலுத்துகிறது என்று சர்வதேச வங்கியான HSBC கூறியுள்ளது.
இந்த அரசாங்கம் ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 98 ரூபாவை முறையற்ற வகையில் ஈட்டுகிறது என்ற விடயம் பற்றி விசாரிக்க வேண்டும். இது குறித்து நாங்கள் இலஞ்ச ஆணைக்குழுவிடம் புகார் அளித்தோம், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
தரம் குறைந்த 30 கப்பல் நிலக்கரியைக் கொண்டுவந்து செய்த மாபெரும் மோசடியால், இந்த நாட்டு மக்கள் இன்று ஒரு பெரிய எரிபொருள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அந்த நிலக்கரி திட்டமிட்டபடி மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் லிட்டர் டீசல் வீணாக எரிக்கப்பட வேண்டியுள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM