அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு விசேட வரவேற்பு!

Published By: Digital Desk 1

08 Jun, 2026 | 03:54 PM
image

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் விசேட வரவேற்பைப் பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினரை நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர், அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையின் நேரடி "கேள்வி நேர" விவாதங்களை நேரில் பார்வையிட்டார். 

இதன்போது, அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக் இனால் அமைச்சர் விஜித ஹேரத்துக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இருதரப்புக்கும் இடையில் முக்கிய உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

மேலும், அவுஸ்திரேலியா - இலங்கை பாராளுமன்ற நட்புச் சங்கத்துடனான கலந்துரையாடலிலும் அமைச்சர் பங்கேற்றார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துதல் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை சமூகத்தின் பங்களிப்பு குறித்தும் பாராட்டப்பட்டது. 

குறிப்பாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கஸாண்ட்ரா பெர்னாண்டோவின் தலைமைத்துவத்தை அமைச்சர் விஜித ஹேரத் பெரிதும் பாராட்டினார். அத்துடன், மேலதிக கூட்டாண்மைகளை ஆராய்வதற்காக அவுஸ்திரேலியா - இலங்கை பாராளுமன்ற நட்புச் சங்கத்திற்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, நியூசிலாந்து விஜயத்தின் போது ஆக்லாந்து மற்றும் கிறைஸ்ட்சேர்ச் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களான பேராசிரியர் கிராண்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பேராசிரியர் பிராங்க் ப்ளூம்பீல்ட் ஆகியோரை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல்களின் மூலம் இலங்கை மாணவர்களுக்கான உயர் கல்வி விசா மற்றும் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்வதற்கும், கூட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நிலநடுக்கத்தில் உயிரிழந்த 185 பேருக்காக, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் மலரஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08