நோர்வே செஸ் தொடரில் விளையாடி, சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய இளைஞரான பிரக்ஞானந்தா (வயது 20), தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று (8) சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
இதன்போது பிரக்ஞானந்தாவுடன் விஜய் செஸ் விளையாடிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த சனிக்கிழமை (6) நடைபெற்ற நோர்வே செஸ் தொடரின் நிறைவு நாள் போட்டியில் பல நாட்டு வீரர்களை பின்தள்ளி, இறுதிச் சுற்றில் ஜெர்மனி செஸ் வீரரான வின்சென்ட் கீமரை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று, இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா சாதனை படைத்தார்.
அதனையடுத்து, வெற்றியோடு சென்னைக்கு இன்று திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனையடுத்து, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரை சந்தித்தார்.
அவ்வேளை விஜய் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, அந்த இளம் வீரரோடு செஸ் விளையாடினார்.
இது தொடர்பாக பிரக்ஞானந்தா கூறுகையில்,
“தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் சார் என்னை அழைத்து பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விஜய் சார் நன்றாக செஸ் விளையாடினார். நான் வெற்றி பெற்றாலும் அவர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று எனக்கு தெரியாது. அத்துடன் எனக்கு 50 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கினார்” என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM