சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிர் விளைவாக கொழும்பு பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்நேற்று முன்தினம் கொழும்பு பங்குச்சந்தை 0.50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
அன்றைய தின சந்தை நடவடிக்கைகள் முடி வின் போது அனைத்து பங்கு விலைச்சுட்டியானது 6,322.96 ஆக காணப்பட்டது இதனை முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் 31.96 அலகு வீழ்ச்சியாகும்.
இந்த வீழ்ச்சிக்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பீ.எல்.சி. இன் பங்குகள் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு பின்னர் பதிவு செய்த வீழ்ச்சியே காரணமாகும்.நேற்று முன்தினம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பீ.எல்.சி. இன் பங்குகள் 153.70 ரூபாவாக பதிவு செய்யப்பட்ட போதிலும் 150.10 ரூபா வரை அந் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
அன்றைய சந்தை புரள்வானது 341.34 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.இதில் உள்நாட்டு கொள்வனவு 238 மில்லயன் ரூபாவாகவும் உள்நாட்டு விற்பனை 241.79 மில்லியன் ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.வழமைபோல் அன்றைய தினம் கொழும்பு பங்கு கொடுக்கல் வாங்கலுக்கு வெளிநாட்டவர்களின் பங்களிப்பு மந்தமாக காணப்பட்டதுடன் வெளிநாட்டு கொள்வனவு 103.38 மில்லியன் ரூபாவாக காணப்பட்டு வெளிநாட்டு விற்பனை 99.55 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
வெளிநாட்டு கொள்வனவில் ஏசியா எசெட் பினான்ஸ் நிறுவனத்தின் 25 மில்லியன் பங்குகளை ரூ.1.50 விகிதம் வெளிநாட்டாவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை உள்ளடங்கியிருந்தது.
சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சீன பங்குச்சந்தை கடந்த சில காலமாக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.அந்த வகையில் ஷங்காய்பங்குச்சந்தையின் பிரதான சந்தை குறியீடான Shanghai Composite Index நேற்று முன்தினம் 6.4% ஆல் வீழ்ச்சியடைந்திருந்தது. இது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட குறைந்த மட்டத்திலான பெறுமதியாகும்.
அத்துடன் ஜப்பான், ஹொங்கொங்,தென்கொரியா, தாய்வான, சங்கப்பூர்,வியட்னாம்,பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய வலய நாடுகளின் பங்குச்சந்தைகளின் அநேகமானவற்றின் செயற்பாடுகள் மந்தக்கதியில் வீழ்ச்சியடைந்திருதமை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதே போல் ஆசிய வலயத்தில் பாரிய நிறுவனங்கள் 50இனால் தயாரிக்கப்படும் MSCIASIAAPEX 50 சுட்டி அன்றைய தினம் 2.22% இல் விழ்ச்சியடைந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM