அட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (8) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததில் அந்த வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஒருவழிப் போக்குவரத்துக்காக அவ்வீதி சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொடரும் மழையுடனான வானிலையால் அட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறியாக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் விழிப்புடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளும் நோர்வூட் நிர்வாகப் பொறியியலாளர் அலுவலக அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM