இன்றைய வானிலை!

Published By: Digital Desk 1

08 Jun, 2026 | 08:05 AM
image

நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவிற்குப் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் இக்கடல் பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மறு அறிவித்தல் வரும் வரை காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்குள் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஏனைய கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவிற்கு கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருநாகல் - புத்தளம் வீதியில் பேருந்து...

2026-07-20 11:17:09
news-image

மொனராகலையில் பேருந்துடன் வேன் மோதி விபத்து:...

2026-07-20 10:48:26
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044...

2026-07-20 10:57:02
news-image

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்:...

2026-07-20 10:43:33
news-image

சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும்...

2026-07-20 10:04:10
news-image

தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு...

2026-07-20 09:59:17
news-image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த...

2026-07-20 09:24:47
news-image

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை:...

2026-07-20 09:20:53
news-image

நாட்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்...

2026-07-20 08:59:40
news-image

நவகமுவ கொரதோட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: இரு...

2026-07-20 08:57:46
news-image

இன்றைய வானிலை 

2026-07-20 06:07:56
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்புக்கு பாராளுமன்றத்தில் கடுமையான...

2026-07-20 04:54:10