காலியில் பணம் மற்றும் அதிக போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

06 Jun, 2026 | 12:59 PM
image

காலி, கந்தவத்தை பகுதியில்  போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் 3,222 போதை மாத்திரைகளுடன் காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (05)  பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3,222 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், இந்த மாத்திரைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ததன் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும்  ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 310 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி, கந்தவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காலி பொலிஸார், இப்போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08