ஆபிரிக்காவில் வேகமாகப் பரவிவரும் புண்டிபுக்யோ எபோலா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு மாத கால கூட்டுத் தயார்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை திட்டம் ஆபிரிக்க சுகாதாரத் தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து இந்த புதிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை வைரஸ் பரவலை விரைவாகக் கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார்.
ஜூன் முதல் நவம்பர் 2026 வரை செயல்படுத்தப்படும் இந்தக் கண்ட அளவிலான திட்டத்திற்கு 517.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. இது, சுகாதாரத் தலைவர்கள் 'ஒரே திட்டம், ஒரே நிதிநிலை, ஒரே குழு' என்று அழைக்கும் அணுகுமுறையின் கீழ் அரசாங்கங்கள், விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், சமூகங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளை ஒன்றிணைக்கிறன.
"பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைமையின் கீழ், நெருங்கிய கூட்டாண்மையுடன், ஒரே ஒருங்கிணைந்த முயற்சியில் இணைந்து செயல்படுவதன் மூலமே இந்த நோய்ப் பரவலை வெல்ல முடியும்," என்று உலக சுகாதார அமைப்பின்பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவின்போது கூறினார்.
கென்யா மற்றும் பரந்த எல்லை தாண்டிய நடமாட்டம் உள்ள பிற கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு, இந்த உத்தியானது, தனித்தனி தேசிய அளவிலான நடவடிக்கைகளிலிருந்து, கண்டம் தழுவிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை நோக்கிய ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த அமைப்பு, விரைவாகப் பதிலளிக்கவும், சிறப்பாக ஒருங்கிணைக்கவும், நோய்ப் பரவல்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நூற்றுக்கணக்கான உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொடர்புகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆபிரிக்கா சிடிசி தெரிவித்துள்ளது. மோதல், இடம்பெயர்வு, எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகள் மற்றும் விரிவான எல்லை தாண்டிய வர்த்தகம் ஆகியவை வைரஸைக் கட்டுப்படுத்துவதை குறிப்பாகக் கடினமாக்கியுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM