மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி, மீகொடை சந்திக்கு அருகில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அன்றைய தினம் தானசாலை ஒன்றின் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்ததில் , 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்துத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வேனின் சாரதி, ஜூன் 01 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தினுள் மேலும் மூன்று பேர் பயணித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து, வாகனத்தில் இருந்த அந்த மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள இந்த மூன்று சந்தேகநபர்களையும் தேடிக் கைது செய்வதற்காக இரு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்களைப் பற்றிய விபரங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்:
முதலாவது சந்தேகநபர்:
அத்தனாயக்ககே டொன் வசந்த (வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்), முகவரி: இல. 243/டி, குடமடுவ, சித்தமுல்ல, பிலியந்தலை.
இரண்டாவது சந்தேகநபர்:
எஸ். கே. குமார எனப்படும் செல்லமுத்து செல்லகுமார், முகவரி: இல. 342/டி, பெலன்வத்தை, பன்னிபிட்டிய.
மூன்றாவது சந்தேகநபர்:
டொன் சரத் ஹெட்டிகே, முகவரி: இல. 337/07, பெலன்வத்தை, பன்னிபிட்டிய.
இந்த நபர்கள் குறித்த ஏதேனும் நம்பகமான தகவல் தெரிந்தால், உடனே பின்வரும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மீகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071 859 2179
மீகொடை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி: 077 949 4188
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM