இந்தியாவுக்கு கடந்த புதன்கிழமை (3) விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுவெலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ், டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் 7ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக விஜயம் செய்துள்ள டெல்சி, நேற்று வியாழக்கிழமை (4) டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது எரிசக்தி, வர்த்தகம், முதலீடு ஆகியவை தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதம் குறித்தும் ஆராய்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் டெல்சி சந்தித்துப் பேசினார்.
வெனிசுவெலாவுடனான உறவை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை ஜெய்சங்கர் நேற்றைய சந்திப்பு வேளையில் டெல்சியிடம் உறுதிப்படுத்தினார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, சுகாதார நலன், மருந்துப் பொருட்கள், போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலான துறை சார்ந்த விடயங்களைப் பற்றி கலந்தாலோசிப்பதற்காக இந்திய அரசியல் பிரமுகர்கள் சிலரை சந்தித்து வருகிறார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் டெல்சி, வெனிசுவெலா நாட்டின் எண்ணெய்த்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, அவர் தலைமையிலான குழுவொன்று இந்தியாவுக்கு எரிசக்தி வார மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM