எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய பல்வேறு வகையான வைரஸ்கள் மற்றும் புதிய பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்கக்கூடிய, முற்றிலும் புதிய வடிவிலான தடுப்பூசி ஒன்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தடுப்பூசி ஒன்றின் மிக முக்கிய அங்கமான 'ஆன்டிஜென்' பகுதி, முற்றிலும் செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்டு மனிதர்களில் சோதிக்கப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ்கள் தொடர்ந்து தங்களின் உருவமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. இதனால் தான் கொவிட் மற்றும் குளிர்கால காய்ச்சல் தடுப்பூசிகளை நாம் அடிக்கடி மாற்றிப் புதுப்பிக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக, உலகெங்கும் உள்ள பல்வேறு கொரோனா வைரஸ்களின் மரபணு ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்து இதன் அடிப்படையில், வைரஸ்கள் எவ்வளவுதான் பிறழ்வடைந்தாலும் அல்லது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவினாலும், அவற்றை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திறன் கொண்ட ஒரு சூப்பர் ஆன்டிஜென் பகுதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வடிவமைத்துள்ளது.
"நாங்கள் எப்போதும் வைரஸ்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தொழில்நுட்பம் எங்களை வைரஸ்களின் வளர்ச்சிக்கு ஒருபடி முன்னே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது" என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜொனாதன் ஹீனி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இத்தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்காக 39 ஆரோக்கியமான மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதன் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இது எவ்வளவு தூரம் ஆற்றலுடன் வேலை செய்கிறது என்பதை அறிய சுமார் 200 பேரைக் கொண்டு அடுத்தகட்ட பரிசோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆரம்பகட்ட வெற்றியைக் கொண்டு, கேம்பிரிட்ஜ் குழுவினர் ஒவ்வொரு வருடமும் மாற்றத் தேவையில்லாத உலகளாவிய காய்ச்சல் தடுப்பூசி, பறவைக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் ஆப்பிரிக்காவில் பரவி வரும் கொடிய 'எபோலா' வைரஸிற்கான தடுப்பூசிகளையும் உருவாக்கும் விலங்குப் பரிசோதனைகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இத்தடுப்பூசி ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஆண்டி பொல்லார்ட், "செயற்கை நுண்ணறிவு என்பது தடுப்பூசி ஆராய்ச்சியில் ஒரு கேம் சேஞ்சராக மாறப்போகிறது. இது தடுப்பூசி தயாரிக்கும் வேகத்தை பல மடங்கு அதிகரித்து, எதிர்காலத்தில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM