(நெவில் அன்தனி)
இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (04) வியாழக்கிழமை இரவு நடைபெற்ற டயமண்ட் லீக் தொடர் தடகள போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார்.
இப்போட்டியில் 23 வயதான ருமேஷ் தரங்க 92.62 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த அசாத்திய திறமையை பதிவு செய்தார்.
இலங்கை தடகள வரலாற்றில் ஈட்டி எறிதலில் 90 மீட்டருக்கும் அதிக தூரம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது இந்த முயற்சி ஈட்டி எறிதில் தேசிய சாதனையாகவும் பதிவானது.

'நான் இன்றைய தினம் தேசிய சாதனை நிலைநாட்ட கடும் முயற்சி எடுத்துக்கொண்டேன். அந்த சாதனையைவிட மூன்று மீட்டர் தூரம் அதிகமாக எறிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்' என இந்த சாதனை குறித்து ருமேஷ் தரங்க தெரிவித்தார்.
உலகின் முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், ருமேஷ் வெளிப்படுத்திய இந்தத் திறமையானது புதிய போட்டி சாதனையாக அமைந்ததுடன், முழு உலகிலும் இந்த வருடத்திற்கான ஈட்டி எறிதலில் அதிகூடிய தூரமாகவும் (World Leading) பதிவாகியுள்ளது.
இதன் மூலம், 2006ஆம் ஆண்டில் நோர்வே வீரர் அண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் 90.34 மீட்டர் தூரம் எறிந்து நிலைநாட்டியிருந்த போட்டி சாதனையை ருமேஷ் தரங்க புதுப்பித்துள்ளார்.
அத்துடன், ஈட்டி எறிதல் போட்டியில் ஆசிய வீரர் ஒருவர் வெளிப்படுத்திய இரண்டாவது சிறந்த தூரப் பெறுதியாகவும் இது அமைகின்றது.
இப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இறுதியாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 92.97 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்திருந்தார்.
ருமேஷின் இந்த சாதனை உலக ஈட்டி எறிதல் வரலாற்றில் உலகின் 8ஆவது சிறந்த தூரப் பெறுதியாக பதிவாகியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM