பிரதான புகையிரதக் மார்க்கத்தில் ஹொரபே உபபுகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'நவம்மஹர' புகையிரதக் கடவையில் அவசர அத்தியாவசியப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாகக் குறித்த கடவையில் தற்காலிகப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 08 ஆம் மைல் கல், 05 பகுதியில் அமைந்துள்ள இக்கடவையில், வரவிருக்கும் நாட்களில் முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை இக்கடவையினூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் பகுதியளவில் கட்டுப்படுத்தப்படும். சனிக்கிழமை இக்கடவையினூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக தடை செய்யப்படும்.
அத்துடன், ஞாயிற்றுக்கிழமை இக்கடவையினூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் பகுதியளவில் கட்டுப்படுத்தப்படும்.
இந்த அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் நிறைவு செய்வதை உறுதிப்படுத்துவதற்காகவே இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM