பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (3) உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக, கடந்த மே 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டம் என இனி நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் உள்ளடக்கங்கள்
பிரதான நோக்கங்கள்:
வரி நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்கல்.
தற்போதுள்ள வரி விதிகளில் தெளிவை ஏற்படுத்துதல்.
வரி இணக்கம் மற்றும் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல்.
வரிக் கணிப்பீடுகள் மற்றும் கழிவுகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்தல்.
மூலோபாய பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவளித்தல்.
வெளிப்படைத்தன்மை மற்றும் பணச்சலவை தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல்.
முக்கிய மாற்றங்கள்:
கட்டாய TIN சான்றிதழ்: சில குறிப்பிட்ட முக்கிய நிதிசார் பரிவர்த்தனைகளின்போது, வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருமானக் கணிப்பீட்டில் திருத்தங்கள்: வருமானத்தை கணக்கிடும் முறையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரி விலக்குகள் பற்றிய தெளிவு: குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கான வரி விலக்குகள் குறித்து மேலதிக தெளிவு வழங்கப்பட்டுள்ளது.
தகவலை வெளிப்படுத்தல்: உரிய அதிகாரிகளுக்கு தகவல்களை வெளிப்படுத்துவதற்கான வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM