அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் தானியங்கி இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 3.5 கோடி ரூபா (35 மில்லியன்) பணம் இனந்தெரியாத நபரொருவரால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை (3) பிற்பகல் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை (3) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கியின் ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளைத் தனது இரு கைகளிலும் கொண்டு சென்றுக் கொண்டிருந்த போது வங்கியின் பின்புறமாக இருந்த கதவின் ஊடாக வெளியே எடுத்துச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த நபரொருவர், அவ்ஊழியரிடமிருந்த இரண்டு பணப்பைகளையும் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட பணம், வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பணத்தை திருடி சென்ற சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், ஹொரணை பொலிஸார் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM