நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ராமன் - சீதாதேவி திருக்கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி அன்றைய தினம் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் இந்த வைபவத்தில் இராமாயண காவியத்தில் இடம்பெற்ற காட்சிகள் "அசோக வனம்" நாட்டிய நாடகமாக ஆடப்பட்டது. இந்த நடனத்தை, கொழும்பு அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள், பள்ளியின் இயக்குநரும் நடன ஆசிரியருமான திவ்யா சுஜேன் நடன அமைப்பில் வழங்கினர்.
இந்த நாட்டிய நாடகத்தினைத் தொடர்ந்து மூன்று வருடங்களாகத் தயாரித்து மேடையேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நடனக் கலைஞரான திவ்யா சுஜேனுக்கு "ஞான சுவேதினி" பட்டத்துக்கான விருது வழங்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஆயுள்கால காப்பாளர் ஆதிமூலம், ஆலய சபை உறுப்பினர்கள் நடராஜா, வைத்திலிங்கம் முதலானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM