(செ.சுபதர்ஷனி)
ஹிக்கடுவை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக படகொன்றில் மீனவக் குழுவொன்றுடன் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிக்கடுவை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 6 பேரைக் கொண்ட மீனவக் குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (02) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த குழுவிலிருந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்படகின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளார்.
53 வயதுடைய மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுமார் கடல் 15 மைல் தூரம் குறித்த படகு கடலில் பயணித்துள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் இரவு, உணவு உண்பதற்காக படகில் இருந்த ஏனைய மீனவர்கள் குறித்த நபரைத் தேடிய போது அவர் படகில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி மீனவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM