'நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை அபிநயா அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இரட்டையர்' திரைப்படம்- எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரட்டையர்' திரைப்படத்தில் அபிநயா, இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா ,நடிகை சங்கீதா ஆகியோர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள் அனுமிதா - அனுஷிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகமது அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி இசையமைத்திருக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆசியா ஐகானிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஸ்வரி லட்சுமி நாராயணன் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எதிர்பாராமல் நடைபெற்ற விபத்தில் சிக்கும் பெண்மணிக்கும்.. அவருடைய இரட்டை பெண் பிள்ளைகளுக்கும் இடையே விவரிக்க இயலாத முரண் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும்... அதன் திகிலான பின்னணிகளும் தான் இப்படத்தின் திரைக்கதை. ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவம் கிடைக்கும்'' என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM