சிறிய அளவிலான குறுந்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நாளாந்தம் வருமானம் என்பது மிக மிக அவசியம். அவர்களின் முதலீடு சிறிதும் கூட நஷ்டத்தை எதிர்கொள்ளாமல் முழுமையாக லாபத்தை அள்ளி வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பர்.
ஆனால் விவரிக்க இயலாத பல காரணங்களால் இது பெரும்பான்மையானவர்களுக்கு நடைபெறுவதில்லை. அவர்களின் அன்றைய உழைப்பு வீணாவது தான் மிச்சம். சிலருக்கு குறைவான லாபமும், பலருக்கு குறைவான நஷ்டமும், சிலருக்கு அதீத நஷ்டமும் ஏற்படுவதை நடைமுறையில் காண்கிறோம்.
இந்நிலையில் இதுபோன்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பிரத்யேக வழிபாட்டை மேற்கொண்டால்.. அவர்களுக்குரிய தன வரவு நாளாந்தம் தங்கு தடையின்றி வரும் என ஆன்மீக முன்னோர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
நீங்கள் உங்களுடைய பிறந்த கிழமையில்... உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்து உள்ள நட்சத்திரத்தின் அதி தேவதையை... தெய்வத்தை ... பிறந்த கிழமைக்குரிய பிரத்யேக வண்ணம் கொண்ட மலரை மாலையாக சாற்றி வழிபட்டால்... தன வருவாய் தங்கு தடை இன்றி கிடைக்கும்.
உதாரணத்திற்கு நீங்கள் சதயம் நட்சத்திரத்தில்.. செவ்வாய்க்கிழமை அன்று பிறந்திருந்தால்.. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று அந்த கிழமைக்குரிய செவ்வரளி மலர்களை வாங்கி, மாலையாக தயாரித்து, அதனை சதயம் நட்சத்திரத்திற்கு அடுத்து வரும் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் அதி தேவதையான குபேரனை செவ்வரளி மலர்களை சாற்றி வழிபட்டால்... தன வரவு அதிகரிக்கும்.
சிலர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு அதி தேவதை என 'ஏக பாதர்' எனும் சிவபெருமானை குறிப்பிடுவார்கள். அவருக்கும் நீங்கள் செவ்வரளி மலரை சாற்றி வழிபட்டால் தன வரவு அதிகரிக்கும். இதனை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் மறவாமல் செய்து வந்தாலும் அல்லது ஒவ்வொரு பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று செய்து வந்தாலும்... தன வரவு அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM