கொழும்பு செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தான்சல் நிகழ்வு சனிக்கிழமை (30) மாலை 6 மணியளவில் கொழும்பு செட்டியார் தெரு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டீ சொய்சா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான மகேஷ் குமாரசிங்க, ஜெயந்த டீ சில்வா, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பிரதான பொறுப்பதிகாரி ஜெயந்த டி சில்வா உட்பட அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பிது வைத்தனர்.
ஆறாவது வருடமாக நடைபெற்ற இந்த தன்சல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வெஷாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM