(நமது நிருபர்)
பிரமுகா சட்டக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட "மாதிரி நீதிமன்றம் மற்றும் குற்றவியல் காட்சி: புலனாய்வுப் பயிலரங்கு" அண்மையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புதிய கலைத்துறையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான அஜித் ரோஹண ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நடைபெறவுள்ள சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் பிரமுகா சட்டப் பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
இதன்போது, மேல் நீதிமன்ற வழக்கொன்றை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும், பொலிஸாரின் குற்ற இடப் புலனாய்வு அதிகாரிகள் ஒரு குற்றவியல் காட்சியை எவ்வாறு அறிவியல் பூர்வமாகப் புலனாய்வு செய்கிறார்கள் என்பது குறித்தும் மாணவர்களுக்கு நடைமுறை வழிகாட்டல்களுடன் கூடிய நேரடி அனுபவம் வழங்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, குற்றப் புலனாய்வுகள் தொடர்பான சட்ட விதிகளையும், அதில் பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான யு.ஆர். டி சில்வா, குற்றவியல் வழக்குகளுக்கு சட்டத்தரணிகள் தங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பது குறித்தும், நீதிமன்ற வாதங்களின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்தும் மாணவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கினார்.
சட்டக் துறைக்குள் நுழையவுள்ள மாணவர்களுக்கு, குற்றப் புலனாய்வு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு குறித்து நேரடித் தெளிவை ஊட்டும் நோக்கில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM