ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

24 May, 2026 | 11:14 AM
image

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு 17 ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் மீண்­டு­மொரு யுத்­தத்­துக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க, மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்­வதே அர­சாங்­கத்தின் இலக்­காகும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

எந்­த­வொரு நிலை­யிலும் பிரி­வி­னை­வா­தத்­துக்கு இனிமேல் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது. இரத்த வெள்­ளத்­தி­னாலோ அல்­லது வெடி­குண்­டு­க­ளாலோ நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. அமை­தியால் மட்­டுமே அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாட்டை உரு­வாக்க முடியும் என்றும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

17ஆவது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வு கடந்த 19ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இந்தக் கருத்­து­களை ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இங்கு மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி, “நாட்டின் பாது­காப்­பையும் அமை­தி­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஆயி­ரக்­க­ணக்­கான வீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்­தனர். அவர்கள் யுத்தம் செய்­த­மைக்­கான நோக்கம் அமை­தி­யான நாடு, அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு மற்றும் உலகில் வெற்றி பெறும் நாடு என்ற இலக்கை அடை­வ­தற்­கா­க­வே­யாகும். அவர்­க­ளது இறுதி இலக்கு ஒற்­று­மை­யான நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்பதாகும்.

தற்­போது நாட்டில் ஒற்­று­மையை விரும்­பாத ஒரு பாதையும் ஒற்­று­மையை அங்­கீ­க­ரிக்கும் மற்­றொரு பாதையும் காணப்­ப­டு­கின்­றன. எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான சவால்­களை எதிர்­கொண்­டாலும் நாம் இரண்­டா­வது பாதையை மாத்­தி­ரமே தெரிவு செய்வோம்” என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

படை­யினர் ஏன் போரில் ஈடு­பட்­டனர், அவர்கள் எதற்­காக உயிர்த் தியாகம் செய்­தனர் என்­பதை ஜனா­தி­பதி கூறி­யுள்­ள­துடன் இனி ஒரு­போதும் யுத்­தத்­துக்கு இட­மில்லை என்­பதை உறு­திப்­பட தெரி­வித்­தி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் இந்த நிலைப்­பாடு பாராட்­டத்­தக்­க­தொன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஆனால், படைத்­த­ரப்­பி­ன­ரது உயி­ரி­ழப்­பு­களை மட்­டுமே ஜனா­தி­பதி இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இறுதி யுத்­தத்தின் போது குண்டு மழை பொழி­யப்­பட்­ட­தனால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பலி­யா­கினர். ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் படு­கா­ய­ம­டைந்­தனர். ஒன்­ப­தா­யிரம் சிறு­வர்கள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டனர். 90ஆயிரம் பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். இத­னை­விட ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளிகள் உயிர்­களை மாய்த்­தி­ருந்­தனர்.

இவ்­வாறு தமிழ் மக்கள் பேர­ழி­வு­களை சந்­தித்­தி­ருந்­தனர். விடு­தலைப் புலி­களை முற்­றாக ஒழித்­து­விட்­ட­தாக அன்­றைய மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் மார்­தட்டிக் கொண்­டது. யுத்த வெற்றி விழா கொண்­டாட்­டங்­களை நடத்­தி­யது. யுத்­தத்தில் பல்­லா­யிக்­க­ணக்­கான மக்கள் கொன்று குவிக்­கப்­பட்டு அவல நிலையில் வாழ்ந்த போது அவர்­களை அடக்­கி­யொ­டுக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

தமிழ் மக்கள் பேர­ழி­வு­களை சந்­தித்து 17 வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் இன்­னமும் அந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. அவர்கள் மீதான படு­கொ­லைகள் தொடர்­பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் உரிய விசா­ர­ணைகள் இன்­னமும் நடத்­தப்­ப­ட­வில்லை. பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் தான்­தோன்­றித்­த­ன­மான போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றன. தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் முன்­னைய அர­சாங்­கங்­களைப் போன்றே இந்த விட­யத்தில் செயற்­பட்டு வரு­கின்­றது.

யுத்­தத்தில் படை வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்­ததைப் போன்று தமிழ் மக்­களின் சார்­பிலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்கள் பலி­யி­டப்­பட்­டுள்­ளன. தற்­போது இரா­ணு­வத்­தி­னரின் உயிர்த் தியா­கங்­களை நினைவு கூரும் ஜனா­தி­பதி, பேர­ழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்­களின் உணர்­வுகள் குறித்தும் சற்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

மூன்று தசாப்த கால யுத்­தத்தில் அழி­வு­களை மட்­டுமே சந்­தித்த தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண்­பது குறித்து ஜனா­தி­பதி சிந்­திக்க வேண்டும்.

யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­டு­வ­துடன் யுத்­தத்­துக்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் ஜனா­தி­பதி முன்­வர வேண்டும்.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை நடத்தி தமிழ் மக்­க­ளுக்கு நீதியை வழங்க வேண்டும் என்ற எண்­ணப்­பாடு ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்கு ஏற்­பட வேண்டும்.

இதே­போன்றே அர­சியல் தீர்­வு­காணும் விட­யத்­திலும் ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் இனி­யா­வது முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். தேசிய மக்கள் சக்­தி­யா­னது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்ற உறு­தி­யினை வழங்கி ஆட்­சிக்கு வந்­தி­ருந்­தது.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தேசிய மக்கள் சக்­திக்கு வடக்கு, கிழக்கில் பெரும்­பான்­மை­யான தமிழ் மக்கள் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர்.

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மையில் தேசிய மக்கள் சக்தி தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காணும் என்று தமிழ் மக்கள் எண்­ணி­யி­ருந்­தனர். ஆனால், தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் இன்­னமும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கோ அல்­லது அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கோ தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்று அர­சாங்கம் கூறி வரு­கின்­றது. யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வைக் காண்போம் என்று அர­சாங்கம் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது.

இத்­த­கைய வாக்­கு­று­தி­களை இனி­யா­வது நிறை­வேற்­று­வது குறித்து அர­சாங்கம் சிந்­திக்க வேண்டும். நாட்டில் மீண்­டு­மொரு யுத்தம் ஏற்­படக் கூடாது என்றால் இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­யமும் அவ­ச­ர­மு­மாகும்.

நல்­லி­ணக்கம் இல்­லை­யென்றால் ஒரு­போதும் நாட்டில் நிரந்­தர சமா­தானம் ஏற்­ப­டுத்­தப்­பட மாட்­டாது. கடந்த கால அனு­ப­வங்­களை கருத்­தில்­கொண்டு தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு 17 வரு­டங்கள் பூர்த்­தி­ய­டைந்த பின்­னரும் நல்­லி­ணக்கம் இன்­னமும் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மானால் இனங்­க­ளுக்­கி­டையே சந்­தேக மனப்­பாங்கு இல்­லாத நிலைமை உரு­வாக்­கப்­பட வேண்டும். அத்­துடன் இந்த நாடு எமது நாடு என்ற எண்­ணப்­பாடு சகல மக்கள் மத்­தி­யிலும் ஏற்­பட வேண்டும்.

தற்­போது தேசிய மக்கள் சக்­தியின் ஆட்­சியில் யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவு கூரு­வ­தற்­கான சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மோத­லில்­களில் உயி­ரி­ழந்த போரா­ளி­களை நினைவு கூரு­வ­தற்கும் உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த இரண்டு வரு­டங்­களும் மாவீரர் வாரத்தை அனுஷ்­டிக்கும் நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.

உயி­ரி­ழந்த உற­வு­களை அது யாராக இருந்­தாலும் அவர்­களை நினைவு கூரு­வ­தற்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும்.

தெற்கில் யுத்­தத்தில் உயிர் நீத்த படை­யி­னரை நினைவு கூரும் ஜனா­தி­பதி, அந்த நிகழ்வில் கொடூர யுத்­தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள் தொடர்பிலும் நினைவுறுத்தியிருக்க வேண்டும். இத்தகைய இழப்புகளை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியும் இனியாவது உணர்ந்துகொள்வது அவசியமாகின்றது.

30 வருட கால யுத்தத்தில்  பல்லாயிரக்கணக்கான மக்களை நாம் இழந்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் இலங்கையர்களேயாவர். ஜனாதிபதி கூறுவதைப் போன்று இனியொரு யுத்தத்துக்கு இடமளிக்காது இருக்க வேண்டுமானால் தமிழ் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்தால்தான் மீண்டுமொரு யுத்தம் என்ற பேச்சுக்கே இடமற்ற தன்மையை உருவாக்க முடியும். எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18