இலங்கையில் தமிழினப் படுகொலையின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கனடாவில் பல்வேறு இடங்களிலும் கடந்த 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
பிரம்ரன் மாநகர்
பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பிரம்ரன் நகரசபையின் மேயர் பெற்றிக் பிரவுண் சார்பாக பிரம்ரன் மாநகர சபையின் 7ஆம், 8ஆம் வட்டாரங்களுக்கான கவுன்சிலர் றொட் பவர் உட்பட பலரும் பங்கேற்றனர்.





புகைப்படக் கண்காட்சி
கனேடியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் புகைப்படக் கண்காட்சி நிகழ்வு கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன், புகைப்படக் கண்காட்சியை பார்வையிடுவதையும் அஞ்சலி நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.











டொரன்ரோ மாநகர மேயர், மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பில் அஞ்சலி நிகழ்வு
கனடாவில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பெருமளவினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அதில் டொரன்ரோ மாநகர மேயர், மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரச் செயலாளர் நா.காண்டீபன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM